அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த டிரம்ப் உத்தரவு

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த டிரம்ப் உத்தரவு


பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர்.

ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டது. இந்நிலையில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



டிரம்பின் கருத்துக்கள் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்று பென்டகனின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் அமெரிக்க இராணுவம் தங்களது விதிகளை மாற்றுவதற்குப் பதிலாக தங்களின் தற்காப்பு உரிமைக்கு தொடர்ந்து கட்டுப்படுவார்கள் என்று பரிந்துரைத்தனர்.

Comments