மார்ச் 26 அன்று ஐ.எஸ்.டி நேரப்படி11 மணியளவில் 5 லட்சம் பாதிப்பு எட்டப்பட்டது. மார்ச் 27, 9:15 காலை ஐ.எஸ்.டி நேரப்படி உலகம் முழுவதும் 531,860 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தன. 24,057 பேர் வைரஸால் கொல்லப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளுடன் அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது, இது 85,653 ஆக உயர்ந்தது. இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் 8,215 ஆகவும், ஐரோப்பிய நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 80,589 ஆகவும் உள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பின் அடிப்படையில் முதல் 10 நாடுகள் இங்கே
அமெரிக்கா: 85,653
சீனா: 81,782
இத்தாலி: 80,589
ஸ்பெயின்: 57,786
ஜெர்மனி: 43,938
பிரான்ஸ்: 29,566
ஈரான்: 29,406
இங்கிலாந்து: 11,812
சுவிட்சர்லாந்து: 11,811
தென் கொரியா: 9,241
கொரோனா பாதிப்பு முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட இரண்டு மாதங்கள் அல்லது 67 நாட்கள் ஆனது, பெரும்பாலும் சீனாவில் மட்டுமே. இருப்பினும், அதன் பின்னர் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது, மேலும் 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்த ஒரு லட்சம் பாதிப்புகள் நான்கு நாட்கள் எடுத்ததாகவும், அடுத்தடுத்த ஒரு லட்ச பாதிப்புகள் மூன்று நாட்கள் மட்டுமே ஆகின்றன என்றும், அந்த எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஆனால் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது.
வியாழக்கிழமை, ஜி 20 நாடுகள் அவசரகால அமர்வை நடத்தியது, கொரோனா வைரஸ் நோயின் (COVID-19) தொற்றுநோய், குறிப்பாக பொருளாதார முன்னணியில் உலகளாவிய தாக்கத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்தது.
மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி, 90 சதவீத கொரோனா பாதிப்புகள் மற்றும் 88 சத்வீத வைரஸ் இறப்புகள் ஜி 20 நாடுகளைச் சேர்ந்தவை என்று கூறினார்.

Comments
Post a Comment